நன்மதிப்பு கொண்டு நயந்தவர் தம்மையும்
தன்னிலை உணர்த்தும் தகைமையர் தம்மையும்
இருள்சேர் அறியாமை எண்ணத்தால் வேரறுத்து
வெளிச்சம் தருவோரை வெருட்டி அகற்றியே
இருளை விரும்பியே ஏந்தி நின்றோர்
அன்றே அறிவிலார் ஆனார்! - அன்றே
தமதுவாழ்வில் தழைத்திருந்த பெரும்வெளிச்சம்
தம்மால் தொலைந்தது அறியார்!
No comments:
Post a Comment