எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்...
நேரினில் உன்றன் முன்னின்று நெஞ்சின்
காதலை உரைத்தேன் அங்கே!
கார்நிறக் குழலி நீயோ வலைதனில்
காத்திரு என்றே சொன்னாய்!
சீர்மிகும் நாட்கள் ஓடச் சிந்தைதான்
வியப்பில் ஆழ்ந்து
நீர்மலி விழிமுன் நின்றே நீளுமோர்
வியப்புக் குறியாய்!
No comments:
Post a Comment