Wednesday, May 13, 2026

சுழ்ந்துகொண்ட காதலதில்...!

எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தில்...

​நேரினில் உன்றன் முன்னின்று நெஞ்சின்
    காதலை உரைத்தேன் அங்கே!
கார்நிறக் குழலி நீயோ வலைதனில்
    காத்திரு என்றே சொன்னாய்!
சீர்மிகும் நாட்கள் ஓடச் சிந்தைதான்
    வியப்பில் ஆழ்ந்து
நீர்மலி விழிமுன் நின்றே நீளுமோர்
    வியப்புக் குறியாய்!


No comments:

Post a Comment