கயல்நிகர் கண்ணி கவினுறு நோக்கம்
விதியினை மாற்றும் விசித்திர ஆக்கம்
கரைபுரள் கானெனக் கண்களும் ஆட
வரைபடர் கூந்தல் வண்டினம் கூட!,
மின்னும் விழியால் மின்னிடும் மேனி
என்னுள் எரியும் ஏகாந்தத் தானி
வஞ்சனை இல்லா வான்மலர் வதனம்
அஞ்சும் விதியின் அழகிய மதனம்!,
நீலக் கடலென நீண்டிடும் விழிகள்
ஞாலத் தழகுக்கு விதியாகும் வழிகள்!.
No comments:
Post a Comment