காய்ந்த மணற்பாலை கார்ப்பெயலால் தண்குளிரும்
ஆய்ந்தவன்பு நெஞ்சத் தகம்.
வெம்மைப் பெருபாலை வீசுகுளிர் சோலையாம்
செம்மை இதயத் தவர்க்கு.
சுட்டெரிக்கும் பாலைச் சுடுமணலும் சோலையாம்
நட்ட இதயத்து நட்பு.
பாறை மணற்பாலை பாய்மழையால் சோலையாம்
ஈர இதயத்து இயல்பு.
கானல் மணற்பாலை காரொளியால் சோலையாம்
மானதத்தின் நல்லன்பு மன்.
வாட்டும் சுடுபாலை வண்மழையால் சோலையாம்
ஊட்டும் இதயத்து அன்பு.
பட்ட மரப்பாலை பாய்மழையால் சோலையாம்
தொட்ட இதயத்துத் தூய்து.
அற்ற வறள்பாலை ஆய்பொழில் சோலையாம்
நற்றயவு நெஞ்சத்து நாடு.
வற்றாத வன்பால் வறண்ட நிலப்பாலை
உற்ற இதயத்தால் வான்.
காடு வறண்ட கடும்பாலையும் சோலையாம்
நீடு இதயத்து நேர்.
No comments:
Post a Comment