Sunday, November 8, 2020

களவுபோன கற்பியல்

பதுமையவள் வெதும்பினால்
முதுபெரும் மதுக் குவளையும் ததும்புமாம்
புதுமகளாய் பொதுமகள்.

மழையோடு விளையாடு...

பெருகிய நதிநீர் வெள்ளம்
          பெருமத கூடு சென்று
மருவிய வேரி புக்காங்
          குறுமத கூடு சென்றுத்
திருவியல் கழனி யெங்குஞ்
          செறிந்துபல் லுயிர்க டோறு
மொருபரம் பரன்வி யாபித்
          துறுதிறங் காட்டிற் றன்றே!.


Monday, November 2, 2020

வாழ்த்துரை- புனிதம் தேடும் புதினம்...

எமது படைப்பான "புனிதம் தேடும் புதினம்" எனும் நூலினை வாசித்துவிட்டு மதிப்புரையாகவே தமது வெளிப்படையான உரையினை நல்கிய "மேட்டுப்பாளையம் அமுதம் புக் ஷாப், தோழர் பாபு அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்...

-----------×----------×----------×----------×----------×----------×----------×----------×----------×----------

அமுதம் புக்ஸ் வழங்கும் மூன்றாம் பாலினத்தவரின் விழிப்புணர்வு நூல் வாசிப்பை நேசிப்பவர்களுக்காக...

      புனிதம் தேடும் புதினம்
   ~~~~~~~~~~~~~~~~~~~~~

மூன்றாம் பாலினத்தவரையும் அழகிய முறையில் உலகிற்கு அறிமுகம் செய்யும் தோழர் கௌதமன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.

இந்த நூலை வாசிக்கும் அனைவர்களின் மனதிலும் இதுவரை  இவர்களைப் பற்றி இருந்த தவறான நிலைப்பாடு இனி தவிடு பொடியாகிவிடும்.

மானிடப்பிறவியில் மூன்றாம் பாலினமாக பிறந்த திருநங்கை தோழர்களை சமூகம் பார்க்கும் அநாகரீக பார்வையிலிருந்து...

மாறுபட்ட  தொலைநோக்கு பார்வையில் இவர்களை இந்த நூல் மூலமாக அழகிய முறையில் கண்ணியப்படுத்தி இருக்கிறார் நூலாசிரியர்.

இன்றைய காலச்சூழலில் திருநங்கைகளின் சோகம், வருத்தம், தனிமை,  சமூகப்பார்வை, புறந்தள்ளுதல், வீடுகளிலிருந்து கைவிடப்பட்ட இறுக்கமான சூழல் என்ற நிலையிலிருந்து....

இவர்களையும் சக தோழர்களாக கரம்பிடித்து அழைத்து இவர்களின் மெல்லிய உணர்வுகளை மாலையாக்கி மணக்க வைத்திருக்கிறார் தோழர் கௌதமன்.

இவர்களை ஈன்றவர்கள் தான் முதலில் மாறவேண்டும். எந்த சூழலிலும் இவர்களை புறந்தள்ளாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

இனிவரும் அடுத்த தலைமுறையிலாவது இந்த மனமாற்றம் அவசியம் வரவேண்டும் என்பதை நளினமாக சொல்லி இருக்கிறார் கௌதமன்.

திரைப்படங்களிலும், சின்ன திரைகளிலும், தெருக்களிலும், பொது இடங்களிலும் இதுவரை இருந்த கேளிக்கையான சொல்லாடல் போக்கு இனியாவது மாற்றப்பட வேண்டும்.

நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...? என்ற பாரதியின் வரிகளை வாசிக்கும் போது  நினைவு கொள்ள செய்கிறது இந்நூல்.

மானுடப் பிறவியில் கூன், குருடு, செவிடு நீங்கிப் பிறந்தவர்கள் காட்டும் பரிவு, பேடு நீங்கி பிறந்தவர்களிடம் இல்லை என்கிற உணர்த்தல்  வாசிக்கும் நம் உணர்வுகளை பிழிந்தெடுக்கிறது.

ஏறத்தாழ 110 பக்கங்களில் மிதமான ₹ 70/- விலையில்  தமிழ்கூறும் நல்லுலகிற்கு அறுசுவை விழிப்புணர்வு விருந்து படைத்திருக்கிறார் நூலாசிரியர் கௌதமன்.

நூலில் வடமொழிச் சொற்களோ... அல்லது ஆங்கில சொற்களோ கலக்காமல் அமுதினும் இனிய அழகு தமிழில் செதுக்கி இருப்பது மிக அழகு.

இது போன்ற அழகு தமிழ் சொல்லாடலை மற்ற நூல்களில் நிச்சயம் எதிர்பார்க்க முடியாது.

விடையில்லா வினாக்கள் நாங்கள், எங்களுக்கு வாய்த்த வாய்ப்புகள் வரமல்ல அனைத்தும் சாபங்களே என்ற வரிகள் மனதை சுடுகிறது.

இவர்களின் உணர்வுகளை  இதைவிட சிறப்பாக எவரும் சொல்லிட இயலாது.

நிறைவாக வணிகம் மற்றும் சுயநலம் சார்ந்த பரபரப்பான இன்றைய காலச்சூழலில்....

இந்த மூன்றாம் பாலினத்தவரையும் உலகில் எடுத்துக்காட்டாக முற்படுத்த வேண்டும் என்ற முனைப்பிற்கு நூலாசிரியருக்கு விருது கொடுக்க வேண்டும்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தரமான படைப்பு. வாசிப்போம் விழிப்புணர்வு பெறுவோம்.

நகரில் நல்ல நூல்களின் நந்தவனம் அமுதம். இது அறிவுலகவாதிகளின் நல் அடையாளம்!

உங்களின் ஒரு அழைப்பு இல்லம் தேடி நூல்கள் வர ஏதுவாகும் மறவாதீர்கள்!

AMUTHAM BOOKS, MTP. 98430 24980 ~ 94864 11900.

#வேறென்ன_வேண்டுமெனக்கு

வாழ்த்துரை- புனிதம் தேடும் புதினம்

எத்தனை நூல்களைப் படைத்திடினும் இத்தகைய வாழ்த்துரைகளே எமக்கு விருதுகள் எனக் கொள்கிறேன். எமது நூல்களை வாசித்ததற்கு பிறகு தலைமையாசிரியர் சிவக்குமார் அய்யா அவர்கள் உரை நல்கியிருக்கிறார்...

பெரும் படைப்புகளை வாசித்தவர் இன்று எமது குறும் படைப்பினைப் பற்றி எடுத்துரைத்து வாழ்தியதில் அகம் மகிழ்கிறேன்.

நில்லாது தொடரும் எழுத்துப் பாதையில், நிறங்களை நிறைந்த மலர்களால், வழியெங்கும் மணம்வீச விழிவழிக் கசியும் ஆனந்தத்தில் மெய் சிலிர்க்கப் பயணிக்கிறேன்...

நன்றி...! நன்றி...! நன்றி...! அய்யா...

அவரது வாழ்த்துரை உங்களது பார்வைக்காக...

----------*---------*----------*----------*----------*----------*-----------*----------*----------*---------*----------*-----------

வாழ்த்துரை
***************

       வானத்து வண்ண நிலவுக்கு, இந்த கார்த்திகைத் திங்கள் அகல் விளக்கின் வாழ்த்துரை.... 

          சிறந்த கவிஞராய், தமிழ் கூறும் நல்லுலகில்,வலம்வ௫ம் இவர், தற்போது புதிய பாதையில் காலடி வைத்துள்ளார்.

       தன் எண்ணத் தொன்னையில் எழுத்து ஈக்களைச் சுமந்து, மூளையென்னும் பேழையில் இடமின்றி செறிந்து கிடந்த சொற்களால் வகை படுத்தி புதின ௨லகில் புரட்சியைத் தொடங்கியுள்ளார் ... 
         
            இவருடைய கவிதைவரிகளை நுகர்ந்தோர் இவர்தம் ஆற்றலை புரிந்தி௫ப்பர்... 

        தமிழக அரசு சார்ந்த வி௫தினைப் பெற்ற எழுத்தாளர். தன் தொழிலுக்கும், தமிழுக்கும் அழகான தொடர்பினை அமைத்தவர். 

         எழுத்துகளையும், சொற்களையும் பதப்படுத்தி, அழகிய சொல்லோவியம் படைக்கும் ஆற்றல் கொண்ட இவரின் பணி, ௨ணவு உற்பத்தி மற்றும் மேம்பாடுத் துறையில் இயற்கையாக பதப்படுத்தும் தொழில் முனைவோரில் ஒருவர். படிப்போரின், நெஞ்சைக் கவ௫ம் புத்துலகப் படைப்பாளி.... 
     
  " புனிதம் தேடும் புதினம்"
   *****************************
     
   வா௫ங்கள் ... இக் குறிஞ்சிப் பூக்களின் தேனைப் ப௫கச் சொல்வோம்... 

        எடுத்துக் கொண்ட மையக்க௫வோ,அனைவரும் தொட தடுமாறும் தலைப்பு... 150 வ௫டங்களுக்கு மேலாக, ௨லகமுழுவதும் எக்காளமிட்டுச் சிரிக்கும் இனத்தோர் பற்றி கதை.... 

        "கூன், கு௫டு, செவிடு" நீங்கிப் பிறப்பதை விட, "பேடு" நீங்கிப் பிறப்பதே பெ௫மையென நினைக்கும் மனித இனத்தில், ஆண்பால், பெண்பால் இரண்டிற்கும் அப்பால் அடையாளம் காட்டப்படாமல்  தி௫நங்கைகளாய் பிறந்து, ,துன்பப்பட்டு, அவலமான வாழ்க்கை, அவமானங்கள், சவால்கள், சுமக்கும் வலிகள் கணக்கில்இல்லை.... 

     "பாவப்பட்ட பிறவியாய்ப் பிறந்து, நாங்கள் பாதை தொலைத்து நிற்கிறோம்"

   "தடுமாறும் படைப்புகளில் தடம் மாறிய படைப்பு"
 
      இவ்வாறு பிறந்தது யார் செய்த தவறு.... படைத்தல், காத்தல், அழித்தல் எனும் தொழிலை செய்யும் தெய்வங்களே காரணம்..... 

    "படைத்தவன் இ௫ப்பான் பார்த்துக் கொள்வான் " என்பது வெற்று வாய்வீச்சே.... இறைவன் படைப்பினுள் இப் படைப்புக்கு மட்டும் ஏன் இந்த  அவல வாழ்வென எண்ணிய இந்நூலாசிரியர்
தி௫மிகு கெளதமன் நீல்ராஜ் அவர்கள் அ௫மையான காவியத்தை படைத்துள்ளார்.... 

      "நகையே, அழுகை, இளிவரல், ம௫ட்கை, அச்சம், பெ௫மிதம், வெகுளி, ௨வகை" என்ற அப்பால் எட்டெ மெய்ப்பாடுகள் என்பார்.. தொல்காப்பியர்... 

     இவ்வுணர்வுகள் அனைத்தையும் இப் புதினத்தை படிக்கும்போது நம் ௨டலை ௨ரசிவிட்டுச் செல்வதை அறியலாம்.... 

      புதிய சொல்லாக்கங்கள் இவரது தனித்திறமைக்கு கட்டியம் கூறுகின்றன... 

   வேற்று மொழிகள், மேலைநாட்டு மொழி கலப்பின்றி அழகிய குறுங் காவியமாய் இப்புதினம் அமைந்துள்ளது நுாலாசிரியரின் தனித்தன்மைக்குச் சான்றுகள்.... 

     சிறுநகை, பைம்பொழில், துயிலி, தளிர்வேணி, சொற்கோடன்.... ஆகிய கதாபாத்திரங்களும் கூட தூயதமிழ்ப் பெயர்களைக் கையாளப்பட்டிருக்கிறது.

    "நாவாடலை விடுத்து நாவிற்கு சற்றே சுவையூட்டுவோம்"

     "சுழியத்தில் தொடங்கி"

      "துன்பங்களைத் துரத்தி தொய்வடையச் செய்வோம்"

      "௨றக்கம் கூட இரக்கம் காட்ட வில்லை"

     "நாங்கள் விடைகளே இல்லாத வினாக்கள்... வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தாலும், வரமாக இல்லாது சாபமாகவே சபிக்கபட்டவை""
  (இவ்வரிகளின் ஆழம் படிப்போரின் கண்களைக் கலங்க வைக்கிறது) 
      
  இது போன்ற பல வரிகள் நெஞ்சை ஊடுருவி நிற்கின்றன... 

     இப்புதினம் படைக்கும் நிலையில் ஆசிரியர் சந்தித்த இன்னல்கள், வலிகள் பல.

    ஆனாலும், கிடைத்ததை வைத்த சிறப்புடன் செய்யும் ஆற்றல், இவரிடம் இ௫ப்பதால் சிறந்த  புதினமாக, ௨லக தமிழாராய்ச்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்டதே இவ௫க்கு கிடைத்த பெ௫ஞ்சிறப்பு... 

   இனி, இம் மானுடம் மூன்றாம்பாலாம் தி௫நங்கைகளையும் போற்றும் என்பது திண்ணம்... 

     இவருடைய முனைப்பிற்கும், இவர் பெற்ற வெற்றிக்கும் ௨ளங்கனிந்த பாராட்டுக்கள். 

  இராம. சு. சிவகுமாரன் 
   தலைமையாசிரியர்(ஓய்வு)